கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

'ஹனுமான்' படம் மூலம் சூப்பர் ஹீரோ படங்களை அறிமுகப்படுத்திய பிரசாந்த் வர்மா தற்போது அடுத்தகட்டமாக 'ஆதிரா' என்ற பேண்டஸி கதையை எழுதியுள்ளார். இதனை அவரது உதவியாளர் கரன் கொப்பி செட்டி இயக்குகிறார். தயாரிப்பாளர் கல்யாண் தேசாரி ஹீரோவாக அறிமுகமாகிறார். சிவேந்திர தாசரதி ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீ சரண் பகலா இசை அமைக்கிறார்.
ஆர்கேடி ஸ்டுடியோஸ் சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா அசுரன் வேடத்தில் நடிக்கிறார். புராணங்களில் இருந்து கதாபாத்திரங்கள் எடுக்கப்பட்டு இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகிறது. இந்தாண்டு இறுதியில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.




