மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

மலையாளத்தில் 2015ல் வெளியான பிரேமம் என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்துவிட்டு, அதன்பின்7 ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு தற்போது இயக்கியுள்ள படம் 'கோல்டு'. பிரித்விராஜ், நயன்தாரா ஜோடி என்கிற புது காம்பினேஷனில் இந்தப்படம் உருவாகி உள்ளது. கடந்த ஓணம் பண்டிகைக்கே வெளிவந்திருக்க வேண்டிய இந்தப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி ஒருவழியாக இன்று( டிச-1) வெளியாகி உள்ளது.
மலையாளம் தமிழ் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. அதேசமயம் கேரளாவில் இன்று படம் வெளியானாலும் தமிழகத்தில் ஒரு நாள் தள்ளி நாளை (டிச-2) தான் வெளியாக இருக்கிறது. தமிழிலும்கூட வியாழன் அன்றே படங்கள் வெளியாகும் வழக்கம் இருந்தாலும், இந்த வாரம் வெளியாகும் படங்கள் அனைத்துமே வெள்ளிக்கிழமை வெளியாக இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து கோல்டு படமும் அதே தேதியில் வெளியாகிறது.