நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
மலையாளத்தில் 2015ல் வெளியான பிரேமம் என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்துவிட்டு, அதன்பின்7 ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு தற்போது இயக்கியுள்ள படம் 'கோல்டு'. பிரித்விராஜ், நயன்தாரா ஜோடி என்கிற புது காம்பினேஷனில் இந்தப்படம் உருவாகி உள்ளது. கடந்த ஓணம் பண்டிகைக்கே வெளிவந்திருக்க வேண்டிய இந்தப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி ஒருவழியாக இன்று( டிச-1) வெளியாகி உள்ளது.
மலையாளம் தமிழ் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. அதேசமயம் கேரளாவில் இன்று படம் வெளியானாலும் தமிழகத்தில் ஒரு நாள் தள்ளி நாளை (டிச-2) தான் வெளியாக இருக்கிறது. தமிழிலும்கூட வியாழன் அன்றே படங்கள் வெளியாகும் வழக்கம் இருந்தாலும், இந்த வாரம் வெளியாகும் படங்கள் அனைத்துமே வெள்ளிக்கிழமை வெளியாக இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து கோல்டு படமும் அதே தேதியில் வெளியாகிறது.