அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
இந்தியாவில் ஜிஎஸ்டி என்ற வரி அமலுக்கு வந்ததை அடுத்து திரைப்படங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதை போல் 10% டிடிஎஸ் தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஜிஎஸ்டி வரி மற்றும் டிடிஎஸ் தொகையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் டி.சிவா, லலித் குமார், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலரும் டில்லி சென்று தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார்கள். அதில், திரைப்படங்களின் வியாபாரங்களுக்கு வசூலிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், பத்து சதவீதம் வசூலிக்கப்படும் டிடிஎஸ் தொகையை இரண்டு சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.