‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்தவரான கால்பந்து வீராங்கனை பிரியா, காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், தவறான சிகிச்சை காரணமாக இறந்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதையடுத்து பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். அதோடு, கால்பந்தாட்ட வீராங்கணையின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இப்படியான நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிலவில், ‛‛என் கேம் என்னை விட்டுப் போகாது. கம் பேக் கொடுப்பேன். தங்கை பிரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப் போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துக்கள். அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை'' என்று பதிவிட்டு இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.