கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி |
சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்தவரான கால்பந்து வீராங்கனை பிரியா, காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், தவறான சிகிச்சை காரணமாக இறந்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதையடுத்து பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். அதோடு, கால்பந்தாட்ட வீராங்கணையின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இப்படியான நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிலவில், ‛‛என் கேம் என்னை விட்டுப் போகாது. கம் பேக் கொடுப்பேன். தங்கை பிரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப் போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துக்கள். அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை'' என்று பதிவிட்டு இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.