இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

‛லெஜண்ட்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் ஜவுளிக்கடை அதிபரான சரவணன். முதல் படத்தில் அவர் சந்தித்த விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார். தற்போது கொடி, கருடன் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனது இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அதேசமயம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சரவணன் ‛கேங்ஸ்டர்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.