நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன்'.
கல்கியின் சரித்திர நாவலை அதன் எழுத்து வடிவ பிரம்மாண்டத்திற்கேற்ப இயக்குனர் மணிரத்னம் படமாக்கியுள்ளதாக படத்தைப் பார்த்த பலரும் பாராட்டினார்கள். வழக்கமான 2டி படமாக வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தை அகன்ற திரையான ஐமேக்ஸ் வடிவில் பார்க்க பலரும் ஆசைப்பட்டார்கள். படம் வெளியான நாளிலிருந்து தொடர்ந்து பல காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஐமேக்ஸ் தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
சென்னை வட பழனி, வேளச்சேரி ஆகிய இரண்டு இடங்களில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர் வளாகங்களில் தலா ஒரு ஐமேக்ஸ் தியேட்டர் என இரண்டே இரண்டு ஐமேக்ஸ் தியேட்டர்கள்தான் சென்னையில் உள்ளன. மற்றுமொரு அகன்ற திரையாக பி-எக்ஸ்எல் வடிவ தியேட்டர் ஒன்று அண்ணா நகரில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர் வளாகத்தில் உள்ளது. இந்த மூன்று தியேட்டர்களிலும் 'பொன்னியின் செல்வன்' காட்சிகள் இன்றோடு முடிவடைகிறது.
நாளை முதல் ஹாலிவுட் திரைப்படமான 'பிளாக் ஆடம்' திரைப்படத்தை இரண்டு ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் திரையிட உள்ளார்கள். கடைசி நாள் வரை ஏறக்குறைய அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் திரையீட்டை இன்றுடன் முடித்துக் கொள்வது அந்தப் படத்தை இன்னும் ஐமேக்ஸ் வடிவில் பார்க்காத ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.