பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? |
ஒரு படத்தின் வெற்றி என்பது அதன் பிரம்மாண்டத்திலோ, அதில் நடிக்கும் பெரிய நடிகர்களிடத்திலோ இல்லை என்பதை அவ்வப்போது சில படங்கள் நிரூபித்து வருகின்றன. ஒரு படத்திற்கு கதையும், அதைச் சொல்லும் விதமும்தான் முக்கியம் என்பதை சமீபத்தில் வெளிவந்த கன்னடப் படமான 'காந்தாரா' நிரூபித்திருக்கிறது.
சுமார் ரூ.15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தற்போது நான்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமான லாபத்தைக் கொடுத்துள்ளது. கர்நாடகாவில் மட்டுமே இப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்தும், மற்ற மாநிலங்களில் சுமார் ரூ.40 கோடி, வெளிநாடுகளில் ரூ.10 கோடி எனக் கடந்து ரூ.150 கோடிக்கும் அதிகமாக நிகர வசூலைப் பெற்றுள்ளதாம்.
'காந்தாரா' படத்தைத் தயாரித்த ஹாம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் இதற்கு முன்பு வெளிவந்து ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த 'கேஜிஎப் 2' படத்தின் பட்ஜெட்டே ரூ.100 கோடிக்கும் குறைவுதான். அந்தப் படத்திலேயே 1000 கோடி வரை, அதாவது 10 மடங்கு லாபம் பார்த்தார்கள். அது போல இப்போது 'காந்தாரா' படத்தின் மூலமும் ரூ.10 மடங்கு லாபத்தைப் பார்ப்பார்கள் என கர்நாடகா பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.