கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து இந்த ஆண்டில் வெளியான தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. பான் இந்தியா படமாக வெளிவந்த இந்தப் படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் படத்தை நேரடியாகக் களமிறக்கி உள்ளார்கள். பல பிரிவுகளில் இந்தப் படம் போட்டியிடுகிறது.
இதனிடையே, ஜப்பான் நாட்டில் நாளை மறுதினம் 'ஆர்ஆர்ஆர்' படத்தை வெளியிட உள்ளார்கள். அங்கும் படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் ஜப்பான் தலைநகரான டோக்கியோ சென்றுள்ளனர். அவர்களுடன் ராஜமவுலியும் இணைந்து கொள்ள உள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'பாகுபலி 2' படமும் ஜப்பான் நாட்டில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அங்கு பத்திரிகையாளர் சந்திப்பு, டிவி சேனல்கள், நாளிதழ்களுக்குப் பேட்டிகள் என படத்தை அனைத்து ஜப்பான் ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளார்களாம். ஒரு வாரத்திற்குப் பிறகு 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.