அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா? | விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! |
மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ல் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன், ரகுமான் பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு என குணச்சித்திர நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதில் மதுராந்தகர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ரகுமான் இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் கூறியுள்ளார்.
“25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவல் டிவி தொடராக எடுக்க முயற்சி நடைபெற்றபோது அதில் ஒரு கதாபாத்திரத்தில் நானும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன். துரதிஷ்டவசமாக அந்த முயற்சி நடக்கவில்லை. அதேசமயம் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இயக்குகிறார் என தகவல் வெளியானபோது எப்படியாவது அதில் ஒரு கதாபாத்திரம் நமக்கு கிடைத்து விடாதா என நினைத்திருந்தேன். அதற்கேற்ற மாதிரி மணிரத்னத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
படப்பிடிப்பின்போது நிறைய நடிகர்கள் காம்பினேஷன் கொண்ட காட்சியில் அதிக கதாபாத்திர பெயர்கள் அடங்கிய மிக நீண்ட ஒரு வசனத்தை பெயர் வரிசை மாறாமல் நடந்துகொண்டே பேசி நடிக்க வேண்டி இருந்தது. அதை நான்கே டேக்கில் பேசி முடித்ததும் சுற்றியிருந்த படக்குழுவினர் கைதட்டி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.