மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலா இயக்கும் வணங்கான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் இன்று சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. கோவாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதோடு அடுத்த வாரத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாக உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அந்த வகையில் சூர்யாவும் , சிறுத்தை சிவாவும் இருக்கிற வேகத்தை பார்க்கும்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தை முந்திக்கொண்டு இப்படம் திரைக்கு வந்துவிடும் போல் தெரிகிறது. இதற்கெல்லாம் மேலாக, சூர்யா 42 வது படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி என பத்து மொழிகளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.