ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகத்தில் ஸ்டிரைக் நடந்து வருவதால் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. அதனால், ஷங்கர் தற்போது சென்னையில் 'இந்தியன் 2' படத்திற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. படத்தை விரைந்து முடித்துத் தருமாறு ஷங்கரிடம் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். 'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றியில் படத்தை எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிட்டால் நல்ல வசூலைப் பெறலாம் என்பதே எண்ணம்.
அதனால், ஷங்கர் தெலுங்குப் படத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு 'இந்தியன் 2' படத்தை முடித்துவிட்டு வர உள்ளார் என தெலுங்குத் திரையுலகத்தில் பேசி வருகிறார்களாம். அதற்குள் ராம் சரண் வேறு ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள்.
'இந்தியன் 2' படப்பிடிப்பு ஆரம்பமான பின்புதான் எதுவும் உறுதியாகத் தெரிய வரும்.