இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகத்தில் ஸ்டிரைக் நடந்து வருவதால் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. அதனால், ஷங்கர் தற்போது சென்னையில் 'இந்தியன் 2' படத்திற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. படத்தை விரைந்து முடித்துத் தருமாறு ஷங்கரிடம் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். 'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றியில் படத்தை எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிட்டால் நல்ல வசூலைப் பெறலாம் என்பதே எண்ணம்.
அதனால், ஷங்கர் தெலுங்குப் படத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு 'இந்தியன் 2' படத்தை முடித்துவிட்டு வர உள்ளார் என தெலுங்குத் திரையுலகத்தில் பேசி வருகிறார்களாம். அதற்குள் ராம் சரண் வேறு ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள்.
'இந்தியன் 2' படப்பிடிப்பு ஆரம்பமான பின்புதான் எதுவும் உறுதியாகத் தெரிய வரும்.