டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள திரையுலகில் தயாரிப்பாளர், நடிகர் என பிரபலமாக வலம் வந்த நடிகர் விஜய்பாபு மீது, நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என துணை நடிகை ஒருவர் கடந்த ஏப்ரல்-22ல் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று ஒரு மாத காலத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த விஜய்பாபு அங்கிருந்தபடியே முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
பின்னர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கேரளா திரும்பி போலீசாரின் விசாரணைக்கும் நேரில் ஆஜரானார் விஜய்பாபு. இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். ஆனால் உயர்நீதிமன்றம் நடிகருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து கேரள அரசும், பின்னர் பாதிக்கப்பட்ட நடிகையும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்று கேரள அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் விஜய்பாபுவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுத்து விட்டது.
மேலும் தடயங்களையோ சாட்சிகளையோ கலைக்கும் முயற்சியில் ஈடுபடது கூடாது, சம்பந்தப்பட்ட நடிகை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேரிலோ, சோசியல் மீடியா மூலமாகவோ மிரட்டல் விடும் விதமாக விதமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்கிற அறிவுறுத்தலையும் நடிகருக்கு பிறப்பித்துள்ளது.