‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் படத்தில் தனது புருவ சிமிட்டல்கள் மூலம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படம் மூலமாகவும் புருவ அழகியின் பிரபலம் காரணமாகவும் தானும் பிரபலமானவர் அந்த படத்தின் இயக்குனர் ஒமர் லுலு. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சௌபின் சாகிர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக சில ஸ்கிரீன் ஷாட்டுகள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து இயக்குநர் ஓமர் லுலுவுக்கு ரசிகர்களிடமிருந்து கண்டனங்கள் குவிய ஆரம்பித்தன.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் ஓமர் லுலு, தனக்கோ தனது சோசியல் மீடியா பக்கத்தை நிர்வகித்து வரும் அட்மின் நபர்களுக்கோ இந்த விஷயத்தில் துளியும் தொடர்பு இல்லை என்றும் இது குறித்து தனது அட்மின் நபர்களுக்கு கூட என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்றும், ஒருவேளை தனது சோசியல் மீடியா பக்கம் ஹேக் செய்யப்பட்டு இதுபோன்ற அவதூறு செய்தி பரப்பப்பட்டு இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சௌபின் சாஹிர் மற்றும் அவரது ரசிகர்களிடம் இதுதொடர்பாக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த மாதம் இதேபோன்று இவரது சோசியல் மீடியா பக்கத்தில் மம்முட்டி குறித்து இவர் அவதூறாக கருத்து பதிவிட்டதாக இதேபோன்று சில ஸ்கிரீன் ஷாட்டுகள் வெளியாகின. இதையடுத்து ஒருவேளை ஓமர் லுலு சொல்வது போல அவரது சோசியல் மீடியா கணக்கு ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தற்போது ரசிகர்கள் பேச துவங்கியுள்ளனர்.