பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கேம் சேஞ்சர் படத்தை அடுத்து ராம் சரண் நடித்துள்ள படம் பெத்தி. புச்சி பாபு சனா இயக்கியுள்ள இதில் அவருடன் ஜான்விகபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் மார்ச் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட ராஷ்மிகாவை படக்குழு அணுகியபோது அவர் மறுத்து விடவே, இப்போது மிருணாள் தாக்கூர் அந்த பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். சிங்கிள் பாடலுக்கு அவர் நடனமாடுவது இதுவே முதல் முறையாகும். மேலும், தற்போது ஹிந்தியில் நான்கு படங்களில் நடித்து வரும் மிருணாள் தாக்கூர், தெலுங்கில் அட்லி - அல்லு அர்ஜுன் இணைந்துள்ள படத்திலும் நடித்து வருகிறார் .