புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

உப்பன்னா பட இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் தெலுங்கு படம் 'பெத்தி'. இதில் ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
முதலில் இப்படம் இவ்வருட மார்ச் 27ந் தேதியன்று திரைக்கு வருவதாக அறிவித்தனர். ஆனால், படப்பிடிப்பு நிலுவையில் இருந்ததால் ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்தனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த பணிகள் முடிய கொஞ்சம் கால தாமதம் ஏற்படுமாம். அதன் காரணமாக பெத்தி படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகலாம் என செய்தி வெளியாகி உள்ளது. தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.
ஒருவேளை பெத்தி தள்ளிப்போனால் ஏப்ரல் 30ம் தேதியன்று தமிழில் தனுஷ் நடித்து திரைக்கு வரும் 'கர' படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில் போட்டி இல்லாமல் கூடுதல் திரைகள் கிடைக்கும் என தமிழ் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




