'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
மலையாள திரையுலகில் தயாரிப்பாளர், நடிகர் என பிரபலமாக வலம் வந்த நடிகர் விஜய்பாபு மீது, நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என துணை நடிகை ஒருவர் கடந்த ஏப்ரல்-22ல் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று ஒரு மாத காலத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த விஜய்பாபு அங்கிருந்தபடியே முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
பின்னர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கேரளா திரும்பி போலீசாரின் விசாரணைக்கும் நேரில் ஆஜரானார் விஜய்பாபு. இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். ஆனால் உயர்நீதிமன்றம் நடிகருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து கேரள அரசும், பின்னர் பாதிக்கப்பட்ட நடிகையும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்று கேரள அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் விஜய்பாபுவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுத்து விட்டது.
மேலும் தடயங்களையோ சாட்சிகளையோ கலைக்கும் முயற்சியில் ஈடுபடது கூடாது, சம்பந்தப்பட்ட நடிகை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேரிலோ, சோசியல் மீடியா மூலமாகவோ மிரட்டல் விடும் விதமாக விதமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்கிற அறிவுறுத்தலையும் நடிகருக்கு பிறப்பித்துள்ளது.