ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
மலையாள திரையுலகில் தயாரிப்பாளர், நடிகர் என பிரபலமாக வலம் வந்த நடிகர் விஜய்பாபு மீது, நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என துணை நடிகை ஒருவர் கடந்த ஏப்ரல்-22ல் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று ஒரு மாத காலத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த விஜய்பாபு அங்கிருந்தபடியே முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
பின்னர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கேரளா திரும்பி போலீசாரின் விசாரணைக்கும் நேரில் ஆஜரானார் விஜய்பாபு. இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். ஆனால் உயர்நீதிமன்றம் நடிகருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து கேரள அரசும், பின்னர் பாதிக்கப்பட்ட நடிகையும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்று கேரள அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் விஜய்பாபுவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுத்து விட்டது.
மேலும் தடயங்களையோ சாட்சிகளையோ கலைக்கும் முயற்சியில் ஈடுபடது கூடாது, சம்பந்தப்பட்ட நடிகை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேரிலோ, சோசியல் மீடியா மூலமாகவோ மிரட்டல் விடும் விதமாக விதமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்கிற அறிவுறுத்தலையும் நடிகருக்கு பிறப்பித்துள்ளது.