பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
பிரித்விராஜ் நடிப்பில் நீண்ட நாளைக்கு பிறகு அவர் நடித்துள்ள மாஸ் ஆக்சன் படமாக மலையாளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கடுவா. மலையாளத்தில் அதிகப்படியான ஆக்சன் படங்களை இயக்கிய இயக்குனர் ஷாஜி கைலாஷ், 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜை வைத்து இயக்கியுள்ள படம் இது. மலையாளத்தில் உருவாகி, தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் இந்த படம் வெளியாகிறது. கடந்த ஜூன் 30-ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தப் படம் திடீரென ஒரு வாரம் கழித்து ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த படம் கடுவாக்குன்னல் குருவச்சன் ஜோஸ் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருப்பதாகவும் தற்போது உயிருடன் இருக்கும் அவர் இந்த படம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை கேட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதிமாற்றி வைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இன்னொரு பக்கம் இந்த படத்தின் சென்சார் வேலைகள் முடியவில்லை அதனால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மற்ற சில பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு நாளை இந்த படம் மலையாளத்தில் வெளியாகிறது. நாளை மறுநாள் (ஜூலை-8) இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியாகிறது என நடிகர் பிரித்விராஜ் அறிவித்துள்ளார்.