பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி | ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல் | லோகா சாப்ட்டர் 1 சந்திரா படத்திற்கு தனது திரைக்கதையால் வெற்றி தேடித்தந்த நடிகை | பெண் இயக்குனருக்கும், யஷ்க்கும் கருத்து வேறுபாடா? : மலையாள நடிகர் விளக்கம் |
மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது அறிமுக நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தப்பிச் சென்ற விஜய்பாபு தற்போது திரும்பி வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பந்தப்பட்ட நடிகையின் சம்மத்துடன் தான் எல்லாம் நடந்தது. தற்போது திடீரென புகார் அளித்துள்ளார். இதற்கு பின்னால் சதி உள்ளது. கோர்ட்டில் நான் நிரபராதி என்று நிரூபிப்பேன் என்று விஜய்பாபு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த அந்த நடிகை, வழக்கை வாபஸ் பெற விஜய்பாபு தரப்பில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: புகாரை வாபஸ் பெறுமாறு விஜய்பாபுவின் நண்பர் என்னிடம் பேசினார். நான் மறுத்துவிட்டேன். ஒரு கோடி ரூபாய் வரை தருவாகவும் அவர் சொன்னார். புகாரை வாபஸ் பெற மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டேன். என்று கூறியிருக்கிறார்.