'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கில் சாய்பல்லவி நடிப்பில் வரும் ஜூன் 17ம் தேதி வெளியாக இருக்கும் படம் விராட பருவம். ராணா கதாநாயகனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்துள்ள இந்த படத்தை வேணு உடுகுலா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சாய்பல்லவி ஒரு நக்சலைட் கதாபாத்திரத்திலும் அவரது பால்ய கால தோழராக, அதேசமயம் போலீஸ் அதிகாரியாக ராணாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சாய்பல்லவியும் ராணாவும் கலந்து கொண்டு வருகின்றனர்.
அப்படி ஒரு நிகழ்வில் ராணா பேசியபோது, “இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு திரையுலகிலும் எனது நட்பு வட்டாரத்திலும் ஆக்சன் படம் பண்ணுவதை விட்டுவிட்டு இப்படி ஆர்ட் நடித்துக் கொண்டிருக்கிறாயே என கிண்டல் கூட செய்தார்கள். படம் பார்த்தார்கள் என்றால் அவர்களது எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.
இந்த படத்தில் சாய்பல்லவியின் பங்களிப்பு தான் மிக முக்கியமானது.. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு என்னைத்தவிர வேறு எந்த நடிகரை வேண்டுமானாலும் நடிக்க வைத்து விடலாம்.. ஆனால் சாய்பல்லவியின் கதாபாத்திரத்தில் அவரைத்தவிர வேறு ஒருவரை நினைத்து பார்க்கவே முடியவில்லை” என்று செல்லுமிடமெல்லாம் சாய்பல்லவி யின் புகழ் பாடி வருகிறார் ராணா.
இந்த படம் கதாநாயகியை மையப்படுத்தியது என்றாலும் அதுபற்றி எல்லாம் எந்த ஈகோவும் இல்லாமல் சாய்பல்லவியை புரமோட் செய்யும் ராணாவின் இந்த செயல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.