உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் |

தெலுங்கில் சாய்பல்லவி நடிப்பில் வரும் ஜூன் 17ம் தேதி வெளியாக இருக்கும் படம் விராட பருவம். ராணா கதாநாயகனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்துள்ள இந்த படத்தை வேணு உடுகுலா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சாய்பல்லவி ஒரு நக்சலைட் கதாபாத்திரத்திலும் அவரது பால்ய கால தோழராக, அதேசமயம் போலீஸ் அதிகாரியாக ராணாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சாய்பல்லவியும் ராணாவும் கலந்து கொண்டு வருகின்றனர்.
அப்படி ஒரு நிகழ்வில் ராணா பேசியபோது, “இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு திரையுலகிலும் எனது நட்பு வட்டாரத்திலும் ஆக்சன் படம் பண்ணுவதை விட்டுவிட்டு இப்படி ஆர்ட் நடித்துக் கொண்டிருக்கிறாயே என கிண்டல் கூட செய்தார்கள். படம் பார்த்தார்கள் என்றால் அவர்களது எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.
இந்த படத்தில் சாய்பல்லவியின் பங்களிப்பு தான் மிக முக்கியமானது.. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு என்னைத்தவிர வேறு எந்த நடிகரை வேண்டுமானாலும் நடிக்க வைத்து விடலாம்.. ஆனால் சாய்பல்லவியின் கதாபாத்திரத்தில் அவரைத்தவிர வேறு ஒருவரை நினைத்து பார்க்கவே முடியவில்லை” என்று செல்லுமிடமெல்லாம் சாய்பல்லவி யின் புகழ் பாடி வருகிறார் ராணா.
இந்த படம் கதாநாயகியை மையப்படுத்தியது என்றாலும் அதுபற்றி எல்லாம் எந்த ஈகோவும் இல்லாமல் சாய்பல்லவியை புரமோட் செய்யும் ராணாவின் இந்த செயல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.