பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றவர் கெவின் ஸ்பேசி. 62 வயதான இவர் ஓரின சேர்க்கையாளர். இவர் தங்களிடம் வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறாக உறவு கொண்டதாக வெவ்வேறு கால கட்டங்களில் 3 பேர் புகார் அளித்தனர். இது தொடர்பாக லண்டன் போலீசார் கெவின் ஸ்பேசி மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்குகள் தற்போது இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற 10ம் தேதி நடக்க இருக்கிறது. அன்றே தீர்ப்பும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அன்றைய தினம் நேரில் அஜராகுமாறு லண்டன் நீதிமன்றம் கெவினுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் கெவின் ஸ்பேசிக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்த கெவின் 1980ம் ஆண்டு ஹாலிவுட் சினிமாவில் நுழைந்தார். சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் என இருமுறை ஆஸ்கர் விருதுகளை வென்றவர். கெவின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததும் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார்.




