பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றவர் கெவின் ஸ்பேசி. 62 வயதான இவர் ஓரின சேர்க்கையாளர். இவர் தங்களிடம் வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறாக உறவு கொண்டதாக வெவ்வேறு கால கட்டங்களில் 3 பேர் புகார் அளித்தனர். இது தொடர்பாக லண்டன் போலீசார் கெவின் ஸ்பேசி மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்குகள் தற்போது இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற 10ம் தேதி நடக்க இருக்கிறது. அன்றே தீர்ப்பும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அன்றைய தினம் நேரில் அஜராகுமாறு லண்டன் நீதிமன்றம் கெவினுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் கெவின் ஸ்பேசிக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்த கெவின் 1980ம் ஆண்டு ஹாலிவுட் சினிமாவில் நுழைந்தார். சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் என இருமுறை ஆஸ்கர் விருதுகளை வென்றவர். கெவின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததும் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார்.