பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் | 40 வருடங்களை நிறைவு செய்யும் 'விக்ரம்' | 400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் - காவாலய்யா' | ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்? | ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் ஜெயிலர் 2 |

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றவர் கெவின் ஸ்பேசி. 62 வயதான இவர் ஓரின சேர்க்கையாளர். இவர் தங்களிடம் வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறாக உறவு கொண்டதாக வெவ்வேறு கால கட்டங்களில் 3 பேர் புகார் அளித்தனர். இது தொடர்பாக லண்டன் போலீசார் கெவின் ஸ்பேசி மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்குகள் தற்போது இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற 10ம் தேதி நடக்க இருக்கிறது. அன்றே தீர்ப்பும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அன்றைய தினம் நேரில் அஜராகுமாறு லண்டன் நீதிமன்றம் கெவினுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் கெவின் ஸ்பேசிக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்த கெவின் 1980ம் ஆண்டு ஹாலிவுட் சினிமாவில் நுழைந்தார். சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் என இருமுறை ஆஸ்கர் விருதுகளை வென்றவர். கெவின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததும் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார்.




