7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

நடிகை சாய்பல்லவி தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களையும் தியேட்டருக்கு சென்று ரசிகர்களோடு ரசிகராக படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள சர்க்காரு வாரி பாட்டா என்ற படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்துள்ளார் சாய்பல்லவி. ஆனால் அப்படி செல்லும்போது ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்தபடி தனது தலையில் ஒரு துணியை போட்டு முகத்தை மறைத்தபடி தியேட்டருக்குள் சென்ற சாய்பல்லவி திரும்பி வரும்போதும் முகத்தை மறைத்தபடியே ரசிகர்களின் கண்ணில் சிக்காமல் வெளியே வருகிறார். அதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் தெலுங்கில் ராணாவுடன் இணைந்து நடித்துள்ள விராட பருவம் மற்றும் தமிழில் நடித்துள்ள கார்கி ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் சாய்பல்லவி.