பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக புதிய படங்களின் வெளியீடுகள் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவடைந்த பல படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்குத்தான் கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் முன்னுரிமை கொடுத்தன. சிறிய பட்ஜெட் படங்களைப் பார்க்க யாருமே வரவில்லை என்பதே அதற்குக் காரணம்.
இந்நிலையில் ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்த வாரம் 6 படங்கள் வெளியாகியுள்ளன. நேற்று 'காத்து வாக்குல ரெண்டு காதல், ஹாஸ்டல்' ஆகிய படங்கள் வெளியாகின. இன்று 'கதிர், அமைச்சர், திவ்யா மீது காதல்' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. ஓடிடியில் 'பயணிகள் கவனிக்கவும்' படம் வெளியாகி உள்ளது.
இனி வரும் வாரங்களில் வாரத்திற்கு இரண்டு, மூன்று படங்களாவது வெளியாகும் எனத் தெரிகிறது. அடுத்த வாரம் மே 6ம் தேதி 'கூகுள் குட்டப்பா, விசித்திரன்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.