இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதால் தற்போது பிரமோஷன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், டீசரும் வெளியாகி இருக்கிறது. இப்படியான நிலையில் வேட்டையன் படத்தின் கலை இயக்குனர் கதிர் இப்படம் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார் .
அதில் அவர் கூறும் போது, ‛‛வேட்டையன் படத்தின் இடைவேளை வித்தியாசமாக முடியும். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை தூண்டுவதாக இருக்கும். அதேபோல் ரஜினியின் ஓப்பனிங் காட்சி மாஸாக இருக்கும். நீண்டநாளைக்கு பிறகு ரஜினி ரசிகர்களுக்கு இந்த காட்சி மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். சண்டை காட்சிகளிலும் அதிக உற்சாகத்துடன் நடித்துள்ளார் ரஜினி. இந்த படத்தின் கிளைமேக்ஸ் யாருமே எதிர்பார்க்காத வகையில் இருக்கும். பெரும்பாலும் கிளைமாக்ஸ் வரும்போது ஒரு சண்டைக்காட்சி நடக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி இருக்காது. முற்றிலும் வித்தியாசமான மாறுபட்ட ஒரு கதை வடிவத்துடன் இடம் பெற்றிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.