திடீரென உயரும் 'தளபதி கச்சேரி' பாடலின் 'வியூஸ்' | ப்ரூஸ் லீ படத்தின் 'இன்ஸ்பிரேஷன்' தான் 'சிவா' | தமிழ் மார்க்கெட்டை குறி வைக்கும் ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ | தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா |

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதால் தற்போது பிரமோஷன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், டீசரும் வெளியாகி இருக்கிறது. இப்படியான நிலையில் வேட்டையன் படத்தின் கலை இயக்குனர் கதிர் இப்படம் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார் .
அதில் அவர் கூறும் போது, ‛‛வேட்டையன் படத்தின் இடைவேளை வித்தியாசமாக முடியும். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை தூண்டுவதாக இருக்கும். அதேபோல் ரஜினியின் ஓப்பனிங் காட்சி மாஸாக இருக்கும். நீண்டநாளைக்கு பிறகு ரஜினி ரசிகர்களுக்கு இந்த காட்சி மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். சண்டை காட்சிகளிலும் அதிக உற்சாகத்துடன் நடித்துள்ளார் ரஜினி. இந்த படத்தின் கிளைமேக்ஸ் யாருமே எதிர்பார்க்காத வகையில் இருக்கும். பெரும்பாலும் கிளைமாக்ஸ் வரும்போது ஒரு சண்டைக்காட்சி நடக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி இருக்காது. முற்றிலும் வித்தியாசமான மாறுபட்ட ஒரு கதை வடிவத்துடன் இடம் பெற்றிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.




