எதிர்பார்ப்பில் அடுத்தடுத்து சில படங்கள், என்னென்ன ? | அற்புதமான பெண்ணை பெற்ற நான் ஒரு அதிர்ஷ்டசாலி : பூஜா குமார் வெளியிட்ட பதிவு | ஸ்பிரிட் படத்தில் இரட்டை வேடத்தில் பிரபாஸ்? | 'வேட்டையன்' வரட்டும், ரஜினி ரசிகர்கள் வெயிட்டிங்… | இந்த வாரமும் தாக்குப் பிடிக்கும் 'தி கோட்' | தேவரா ரிலீஸ்: ஆடு பலியிட்டு ரத்த அபிஷேகம் செய்த ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் | மகன்களின் இரண்டாவது பிறந்தநாள்- விக்னேஷ் சிவன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு | சிம்பு, அஸ்வந்த் மாரிமுத்து கூட்டணியில் புதிய படம் | அனிரூத், ஸ்ரீலீலா கூட்டணியில் ஆல்பம் பாடல் | அக். 4ம் தேதி ஹிந்தியில் வெளியாகும் 'கடைசி உலகப்போர்' |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த வரும் அவரது 44வது படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவிலும் மற்றும் ஊட்டியிலும் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் பூஜா ஹெக்டே தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளார். இது குறித்து பூஜாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா 44 படக்குழுவினர் தேங்க்யூ பூஜா என ஒரு மிகப்பெரிய கேக் ஒன்றை வெட்டி கொண்டாடியுள்ளனர்.
கடந்த 2022ல் பூஜாவின் வருடம் என்று சொல்லும் அளவிற்கு ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா என எல்லா மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்தார் பூஜா ஹெக்டே. ஆனால் இதில் எந்த ஒரு படமும் அவருக்கு கை கொடுக்காத நிலையில் கடந்த வருடம் ஹிந்தியில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த 'கிஸிகா பாய் கிஸிகி ஜான்' என்கிற ஒரு படம் மட்டுமே அவருக்கு வெளியானது. இந்த 2024ல் அவரது நடிப்பில் வெளியாகும் விதமாக படங்கள் எதுவும் இல்லை. தற்சமயம் இந்த சூர்யா 44 மற்றும் ஹிந்தியில் சாகித் கபூர் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தேவா ஆகிய படங்கள் மட்டுமே கைவசம் இருக்கின்றன. இவை இரண்டும் 2025ல் வெளியாகும் என தெரிகிறது.