தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த வரும் அவரது 44வது படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவிலும் மற்றும் ஊட்டியிலும் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் பூஜா ஹெக்டே தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளார். இது குறித்து பூஜாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா 44 படக்குழுவினர் தேங்க்யூ பூஜா என ஒரு மிகப்பெரிய கேக் ஒன்றை வெட்டி கொண்டாடியுள்ளனர்.
கடந்த 2022ல் பூஜாவின் வருடம் என்று சொல்லும் அளவிற்கு ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா என எல்லா மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்தார் பூஜா ஹெக்டே. ஆனால் இதில் எந்த ஒரு படமும் அவருக்கு கை கொடுக்காத நிலையில் கடந்த வருடம் ஹிந்தியில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த 'கிஸிகா பாய் கிஸிகி ஜான்' என்கிற ஒரு படம் மட்டுமே அவருக்கு வெளியானது. இந்த 2024ல் அவரது நடிப்பில் வெளியாகும் விதமாக படங்கள் எதுவும் இல்லை. தற்சமயம் இந்த சூர்யா 44 மற்றும் ஹிந்தியில் சாகித் கபூர் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தேவா ஆகிய படங்கள் மட்டுமே கைவசம் இருக்கின்றன. இவை இரண்டும் 2025ல் வெளியாகும் என தெரிகிறது.