தள்ளிப்போனது டாக்சிக்: அந்த இடைவெளியில் வேறு படங்கள் வருமா? | இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி | திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் | அபுதாபியில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய சுவாசிகா | வரலட்சுமியின் 'சரஸ்வதி' படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் | ஹைதராபாத் 'ஷிப்ட்' ஆன லோகேஷ் கனகராஜ் 'டீம்' |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த வரும் அவரது 44வது படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவிலும் மற்றும் ஊட்டியிலும் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் பூஜா ஹெக்டே தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளார். இது குறித்து பூஜாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா 44 படக்குழுவினர் தேங்க்யூ பூஜா என ஒரு மிகப்பெரிய கேக் ஒன்றை வெட்டி கொண்டாடியுள்ளனர்.
கடந்த 2022ல் பூஜாவின் வருடம் என்று சொல்லும் அளவிற்கு ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா என எல்லா மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்தார் பூஜா ஹெக்டே. ஆனால் இதில் எந்த ஒரு படமும் அவருக்கு கை கொடுக்காத நிலையில் கடந்த வருடம் ஹிந்தியில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த 'கிஸிகா பாய் கிஸிகி ஜான்' என்கிற ஒரு படம் மட்டுமே அவருக்கு வெளியானது. இந்த 2024ல் அவரது நடிப்பில் வெளியாகும் விதமாக படங்கள் எதுவும் இல்லை. தற்சமயம் இந்த சூர்யா 44 மற்றும் ஹிந்தியில் சாகித் கபூர் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தேவா ஆகிய படங்கள் மட்டுமே கைவசம் இருக்கின்றன. இவை இரண்டும் 2025ல் வெளியாகும் என தெரிகிறது.




