சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தற்போது விஜய் தேவரகொன்டா ஜோடியாக பெயரிடப்படாத புதிய தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் ஏப்ரல் 28ம் தேதி நள்ளிரவு வரை படப்பிடிப்பு நடைடபெற்றது. அப்போது நடுஇரவு 12 மணிக்கு சமந்தாவின் பிறந்தநாளைக் கொண்டாட படப்பிடிப்புக் குழுவினர் அவருக்குத் தெரியாமலேயே ஏற்பாடு செய்தனர்.
உண்மையாக படப்பிடிப்பு நடத்துவது போல ஒரு சோகமான காட்சியைப் படமாக்கினர். சமந்தாவும் சீரியசாக கண்ணீர் விட்டு நடித்துக் கொண்டிருக்க பதிலுக்கு வசனம் பேச வேண்டிய விஜய் தேவரகொன்டா, சமந்தாவின் கண்ணீரைத் துடைத்துவிட்டு 'சமந்தா, ஹேப்பி பர்த்டே' என வசனம் பேச மொத்த குழுவும் சமந்தாவிற்கு 'ஹேப்பி பர்த்டே' என சொல்லி கேக் வெட்டி கொண்டாடினர்.
நடந்தது படப்பிடிப்பு அல்ல, தன்னுடைய பிறந்தநாளுக்காக செய்யப்பட்ட செட்டப் எனத் தெரிந்து சமந்தா மகிழ்ச்சியுடன் கேக் வெட்டினார்.