ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்த 'கேஜிஎப் 2' படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. மிகப் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற இன்று இப்படம் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது.
தமிழகத்தில் 350க்கும் கூடுதலான தியேட்டர்களில் இன்னமும் தொடர்ந்து வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. ராக்கி பாயின் ஓட்டத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி என படத்தைத் தமிழகத்தில் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் 75 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தியில் 350 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கிறதாம். கர்நாடகாவில் 150 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 125 கோடி, பிற மாநிலங்களில் 60 கோடி, கேரளாவில் 50 கோடி, வெளிநாடுகளில் 160 கோடி என 970 கோடி ரூபாய் வசூலை மொத்தமாகப் பெற்றுள்ளது. இன்றைய வசூலுக்குப் பிறகு 1000 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




