இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்த 'கேஜிஎப் 2' படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. மிகப் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற இன்று இப்படம் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது.
தமிழகத்தில் 350க்கும் கூடுதலான தியேட்டர்களில் இன்னமும் தொடர்ந்து வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. ராக்கி பாயின் ஓட்டத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி என படத்தைத் தமிழகத்தில் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் 75 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தியில் 350 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கிறதாம். கர்நாடகாவில் 150 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 125 கோடி, பிற மாநிலங்களில் 60 கோடி, கேரளாவில் 50 கோடி, வெளிநாடுகளில் 160 கோடி என 970 கோடி ரூபாய் வசூலை மொத்தமாகப் பெற்றுள்ளது. இன்றைய வசூலுக்குப் பிறகு 1000 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.