விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' | 5 ஆண்டுகளாக உருவான 'சையாரா' பாடல்கள் | தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி |
விஜய் டிவியில் மிக விரைவில் ஒளிபரப்பாகவுள்ள தொடர் சிப்பிக்குள் முத்து. இந்த தொடரின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஹீரோயினாக பிரபல மாடல் அழகி லாவண்யா அறிமுகமாகிறார். இவர் மாடலாக இருந்த போது, சர்ச்சை நாயகியாக வலம் வரும் மீரா மிதுனால் ஏமாற்றப்பட்டார் என்ற தகவல் தற்போது இணையத்தில் உலா வருகிறது.
மாடலிங் துறையில் ஆர்வமுள்ள பெண்களை மீரா மிதுன் பல மாடல் ஷோக்களில் அறிமுகம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றியதாக பலரும் புகார் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் மிஸ் சவுத் இந்தியா நிகழ்ச்சிக்கு அழைத்து செல்வதாக மீரா மிதுன் சிலரை ஏமாற்றியிருந்தார். அதில் ஒரு மாடல் அழகி தான் லாவண்யா. அவர் தற்போது சீரியலில் கமிட்டாகியிருப்பதால் அவரை பற்றி தகவல்களை துளாவிய நெட்டீசன்கள் இந்த செய்தியை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
லாவண்யா அந்த ஒரு முறை ஏமாந்திருந்தாலும், தனது திறமையால் குயின் ஆஃப் மெட்ராஸ் 2019 மற்றும் மிஸ் தமிழ்நாடு 2020 ரன்னர், மிஸ் போட்டோஜெனிக் - மிஸ் சவுத் இந்தியா ஆகிய விருதுகளை வென்றுள்ளார். இதன்மூலம் ஜீ தமிழின் சூப்பர் குயின் நிகழ்ச்சியின் வாய்ப்பு கிடைக்கவே சின்னத்திரையில் நுழைந்த லாவண்யா தற்போது விஜய் டிவியில் நடிகையாக அடியெடுத்து வைத்துள்ளார். இப்போதே அவருக்கு ரசிகர் பட்டாளம் சேர்ந்து வரும் நிலையில், மிக விரைவில் முன்னணி நடிகையாகவும் ஜொலிப்பார் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.