தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கமல்ஹாசன் 5 வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு நடந்த பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்தார். அவரே கோவை தொகுதியில் தோற்றார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பின்னடைவை சந்தித்தார்.
இதன் காரணமாக தற்போது அரசியலை சற்று குறைத்துக் கொண்டு சினிமாவின் பக்கம் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். அதன் முதல் கட்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது விக்ரம் படத்தில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்ததைய பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை வருகிற 14ம் தேதி காலை 7 மணிக்கு கமல் அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்த உள்ளார் கமல். அதற்கு ஷங்கர் ஒத்துழைப்பு தர வேண்டும். இது தவிர அவர் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நடிக்கும் படங்கள் உள்ளன. இதனால் சினிமாவில் இனி அவரை நிறைவாக காணலாம்.