மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற தமிழ் படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தவர் யாமி கவுதம். இப்போது அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகை. அவர் நடித்து சமீபத்தில் வெளியான தி தேர்ஸ்டே என்ற படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடவும், அவர்களது மறுவாழ்வுக்காக பணியாற்றவும் முன்வந்துள்ளார். இதற்காக அவர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து ஆதரவளித்து செயல்படும் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நான் கைகோர்த்ததை பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தப் பிரச்சினைகளில் பணியாற்ற வேண்டிய அவசியம் பெண்களிடம் இருந்து வருகிறது.
பெண்களுக்கான பாதுகாப்புச் சிக்கல்கள் அதிகரித்து வருகிறது. அதனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. என்.ஜி.ஓக்களுடன் எனது தொடர்பு ஆரம்பம் தான், எதிர்காலத்தில் பெண்களைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் உதவுவதில் மேலும் பங்களிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.