சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற தமிழ் படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தவர் யாமி கவுதம். இப்போது அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகை. அவர் நடித்து சமீபத்தில் வெளியான தி தேர்ஸ்டே என்ற படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடவும், அவர்களது மறுவாழ்வுக்காக பணியாற்றவும் முன்வந்துள்ளார். இதற்காக அவர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து ஆதரவளித்து செயல்படும் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நான் கைகோர்த்ததை பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தப் பிரச்சினைகளில் பணியாற்ற வேண்டிய அவசியம் பெண்களிடம் இருந்து வருகிறது.
பெண்களுக்கான பாதுகாப்புச் சிக்கல்கள் அதிகரித்து வருகிறது. அதனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. என்.ஜி.ஓக்களுடன் எனது தொடர்பு ஆரம்பம் தான், எதிர்காலத்தில் பெண்களைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் உதவுவதில் மேலும் பங்களிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.