பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற தமிழ் படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தவர் யாமி கவுதம். இப்போது அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகை. அவர் நடித்து சமீபத்தில் வெளியான தி தேர்ஸ்டே என்ற படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடவும், அவர்களது மறுவாழ்வுக்காக பணியாற்றவும் முன்வந்துள்ளார். இதற்காக அவர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து ஆதரவளித்து செயல்படும் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நான் கைகோர்த்ததை பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தப் பிரச்சினைகளில் பணியாற்ற வேண்டிய அவசியம் பெண்களிடம் இருந்து வருகிறது.
பெண்களுக்கான பாதுகாப்புச் சிக்கல்கள் அதிகரித்து வருகிறது. அதனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. என்.ஜி.ஓக்களுடன் எனது தொடர்பு ஆரம்பம் தான், எதிர்காலத்தில் பெண்களைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் உதவுவதில் மேலும் பங்களிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.