அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி | 'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி |
விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் நடித்து சமீபத்தில் ஓடிடியில் வெளியான படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் நடித்திருந்தார்கள். ஆனால் படத்தில் வாணி போஜன் நடித்த காட்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதுகுறித்து வாணிபோஜன் ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது: கதைப்படி சிம்ரனை விக்ரம் பிரிந்த பின்னர் வாணி போஜனுடன் அவருக்கு காதல் ஏற்படுகிறது. அவருடன் வாழ்கிறார் என்பது மாதிரியாக கதை எழுதப்பட்டது. இதற்காக வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்தார். சில காட்சிகள் நடித்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக திட்டமிட்ட பல காட்சிகள் படமாக்க முடியவில்லை. குறிப்பாக வாணி போஜன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படாததால் முழுமை பெறாமல் இருந்தது. அதனால் அவரின் காட்சிகள் நீக்கப்பட்டன. இதுப்பற்றி அவரிடம் எடுத்து சொன்னோம். அவரும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார். அவருக்கு நன்றி'' என்றார்.