'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த வருடம் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் நாகசைதன்யா, சமந்தா பிரிவும் ஒன்றாக இருந்தது. தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து நாகசைதன்யாவின் குடும்பப் பெயரான 'அக்கினேனி' என்பதை சமந்தா நீக்கியது அவர்களது பிரிவு சர்ச்சையை ஆரம்பித்து வைத்தது.
அதன்பின் கடந்த வருடம் அக்டோபர் மாதம் சமந்தா, நாகசைதன்யா இருவரும் சமூக வலைத்தளங்களில் தங்களது பிரிவை ஒரே மாதிரியான அறிக்கையாக வெளியிட்டனர்.
தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அந்த அறிக்கைப் பதிவை சமந்தா தற்போது நீக்கியுள்ளார். நாகசைதன்யாவின் சமூக வலைத்தளங்களில் அந்தப் பதிவு அப்படியே இருக்க சமந்தா மட்டும் நீக்கியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனது பிரிவு பற்றிய அறிவிப்புக்குப் பிறகு நாகசைதன்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார் சமந்தா. தற்போது பிரிவு பற்றிய அறிவிப்பையும் நீக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.