‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
பழம்பெரும் மலையாள இசை அமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத். 73 வயதான அவர் நாடத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர், திரைப்பட இசை தவிர்த்து ஐயப்ப பக்தி பாடல்கள் மூலம் புகழ்பெற்றவர். முதுமை காரணமாக மூச்சு திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவருக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
வாழ்க்கை குறிப்பு:
1973 ஆம் ஆண்டு வெளிவந்த 'இயேசு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார், அதன் பிறகு 25 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ஒரு சில தமிழ் படத்திற்கும் இசை அமைத்துள்ளர். பிரின்சிபல் ஒலிவில், மாமலக்கப்புறத், பாப்பன் பிரியப்பட்ட பாப்பன், ஆறந்தே முல்ல கொச்சு முல்லா போன்றவை அவர் இசை அமைத்த முக்கியமான படங்கள். 2000 பக்தி பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ள அவர், இந்த ஆண்டுக்கான 'ஹரிவராசனம்' விருதைப் பெற்றார்.