'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 1400க்கும் அதிகமான படங்களில் இசையமைத்துள்ள இவர் இப்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு முதல் இளையராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக செய்தி பரவியது.
இதுப்பற்றி இளையராஜா உடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் பயணித்து வரும் அவரின் நலம் விரும்பியான ஶ்ரீராமிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ‛‛ராஜா சார் திருவண்ணாமலையில் இருக்கிறார். ஒவ்வொரு புத்தாண்டுக்கும் அவர் அங்கு செல்வது வழக்கம். இன்று இரவு சாமி கும்பிட்டு விட்டு நாளை(ஜன., 1) காலை மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார். மதியம் 2மணிக்கு சென்னை வருகிறார். இதுவே அவரது பயண திட்டம். அவரது உடல்நிலை பற்றி யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ராஜா சார் சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள'' என்றார்.