வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கி, ஏகப்பட்ட பாராட்டுகளை அள்ளியவர் அபிஷன் ஜீவிந்த். திருச்சி பையன், சென்னையில் படித்தவர். அந்த படம் 90 கோடி வரை வசூலித்து சாதனை படைத்ததுடன், தரமான படம் என்ற நல்ல விமர்சனத்தையும் பெற்றது. ரஜினிகாந்த் தொடங்கி பலர் அபிஷனை அழைத்து பாராட்டினார்கள். அடுத்து அவரின் படம் எது என்று கேள்வி எழுந்தபோது அவர் தனுசை வைத்து படம் இயக்க தயாராகி வருவதாக கூறப்பட்டது. சில வாரங்கள் கழித்து அவரே ஹீரோவாக நடிக்கப்போகிறார். அதற்கான வேலைகள் நடக்கிறது என்று தகவல் கசிந்தது. ஆனால் அபிஷனோ நான் ஹீரோவாக நடிக்கவில்லை என்றார்.
இப்போது அவர் ஹீரோவாக நடிப்பது உறுதியாகிவிட்டது. நாளை மறுநாள் அபிஷன் ஜீவிந்த் கதைநாயகனா நடிக்க, அனஸ்வரா ராஜன் ஹீரோயினாக நடிக்கும் படத்தின் பூஜை சென்னையில் நடக்க உள்ளது. அந்த படத்தை அவரின் உதவியாளரான மதன் இயக்க, டூரிஸ்ட் பேமிலியை தயாரித்த மகேஷ் பசிலியான் தயாரிக்கிறார்.
கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் டைரக் ஷனை விட்டு, இப்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார். அந்த பாணியில் அபிஷனும் ஹீரோ ஆக உள்ளார். டூரிஸ்ட் பேமிலி படத்திலும் அவர் சோகமான இளைஞராக நடித்து இருந்தார்.