வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ரஜினியை வைத்து இயக்கி உள்ள படம் ‛கூலி'. இதில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின் சாகிர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் அமீர்கான் நடித்துள்ளார். மோனிகா என்ற பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே குத்தாட்டம் போட்டுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஆக., 14ல் படம் ரிலீஸாக உள்ள நிலையில் நாளை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சாரில் ‛ஏ' சான்று கிடைத்துள்ளது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக ரஜினி படங்களுக்கு அவரது ரசிகர்கள் தாண்டி குடும்ப ரசிகர்களும் அதிகம் வருவார்கள். அப்படி இருக்கையில் இந்த படத்திற்கு ‛ஏ' சான்று கிடைத்திருப்பது விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி படத்திற்கு ஏன் ‛ஏ' சான்று என விசாரித்து பார்த்ததில் படத்தில் நிறைய ஆக் ஷன் மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் உள்ளதாம். பொதுவாகவே லோகேஷ் படங்களில் ஆக் ஷன் பிரதானமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அது கூடுதலாகவே இருக்கிறதாம். சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்று தருவதாக தணிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் லோகேஷ் மற்றும் தயாரிப்பு தரப்பு மறுத்துவிட்டதாம். இதன் காரணமாக படத்தை ஏ சான்றுடனேயே வெளியிட முடிவெடுத்துவிட்டனர். இதை படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.