சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | 'பரிசு' திரைப்படம் கல்லூரி மாணவிகளுக்காக சிறப்பு திரையீடு! | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் | காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம் |
ரவீந்திரநாத் தாகூரின் ‛3 உமன்' என்ற நாவல் மிகவும் புகழ் பெற்றது. இதில் 3 விதமான பெண்களின் வாழ்க்கையை அவர் எழுதியுள்ளார். தற்போது இந்த நாவல் திரைப்படமாகிறது. இதனை இஷிதா கங்குலி இயக்குகிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இந்தியா, அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தயாராகிறது.
இதுபற்றி இஷிதா கங்குலி கூறியிருப்பதாவது: கொரோனா காலத்தில் இந்த படம் பற்றி ஐஸ்வர்யாவிடம் பேசினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. இதில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். அவரைத் தவிர மேலும் இரண்டு ஹீரோயின் கேரக்டர்கள் உள்ளன. அதில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.