பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
இயக்குனர் விஜய் கதை எழுதி, தயாரித்துள்ள படம் சித்திரை செவ்வானம். ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா இயக்க சமுத்திரகனி, சாய் பல்லவியின் தங்கை பூஜா, ரீமா கல்லிங்கல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அப்பா - மகள் பாசத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ஓடிடியில் டிச.,3ல் வெளியாகிறது.
பூஜா கண்ணன் சினிமாவில் அறிமுகமாகும் முதல்படம் இதுவாகும். அவர் கூறுகையில், ‛‛அம்மா மாதிரி சாய்பல்லவி என்னை பார்த்துக் கொள்வார். என் மீது அதிக அக்கறை காட்டுவார். ஆரம்பத்தில் எனக்கு சினிமா ஆசை இல்லை. அக்காவுடன் படப்பிடிப்பு, டப்பிங் சென்றபோது எனக்கும் அந்த ஆசை வந்தது. இதை வீட்டில் சொல்ல பயந்தேன். இயக்குனர் விஜய் தான் என் நடிப்பு ஆசையை கண்டுபிடித்து எனக்கு வாய்ப்பு வழங்கினார். எனக்கு ஒரு அடையாளம் வேண்டும் என்று அக்கா விரும்பினார். கொடுக்கிற ரோலை சரியாக பண்ணு என்றார். ஒரே ஒரு நாள் அக்காவை டப்பிங் ஸ்டுடியோவுக்கு வரவைத்து நான் சரியாக பேசி இருக்கேனா என போட்டுக் காட்டினேன். நல்லா பண்ணிருக்க என்றார். படப்பிடிப்புக்கு நான் மட்டும் தான் போவேன். அம்மாவோ, அக்காவோ இருந்தால் பயம் வரும் என்றார்.