ஆலியா பட் சண்டை காட்சிகள்: ஆச்சரியப்பட்ட பாபி தியோல் | வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ் | 'டான் 3' சர்ச்சையை சமரசமாக முடிக்க ரன்வீர் சிங் முயற்சி | கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன் | தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல் | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பும் கிச்சா சுதீப் | எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; 'காட்டாளன்' படக்குழு வேண்டுகோள் | தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ! | ஜப்பானில் அனிமே விருது விழா : ஹாலிவுட் நடிகருக்கு ராஷ்மிகா அளித்த பதில் | 160 கோடியில் சொகுசு பங்களா கட்டி வரும் பிரபாஸ்! |

இசையமைப்பாளர் இளையராஜா தற்போது சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறார். ஒரு பாடலின் சூழலை விளக்கி, அதற்கான மெட்டையும் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த மெட்டுக்குரிய பாடலை எழுதி அனுப்புமாறு அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனது காதலியோ அல்லது காதலனையோ சந்திக்க செல்கிறார். அப்போது அங்கு நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நபர் நீண்ட நேரமாக வரவில்லை. அந்த சமயத்தில் உள்ள மனநிலையை கொண்டு பாடல் வரிகளை எழுத வேண்டும். பாடல் வரிகள் எந்த மொழியில் இருந்தாலும் பரவாயில்லை, என்று தெரிவித்துள்ளார்.




