ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் |
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கிற படம் பேச்சுலர். வருகிற டிசம்பர் 3ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருப்பவர் திவ்ய பாரதி. இவர்களுடன் முனீஸ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் பாடல்களுக்கு இசையமைக்க, சித்துக்குமார் பின்னணி இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பேசிய நாயகி திவ்யபாரதி உணர்ச்சி வசப்பட்டு மேடையில் அழுதார். அவர் பேசியதாவது: இரண்டு வருடங்களாக நாங்கள் இந்த ஒரு வெற்றிக்காக தான் கஷ்டப்பட்டோம். இதில் பணியாற்றிய அனைவருமே படத்தின் தூண்களாக அமைந்திருக்கின்றனர். எனக்கு இது முதல் படம் என்பதால் தெரியாத நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தனர்.
தயாரிப்பாளர் நினைத்திருந்தால், பிரபலமாக இருக்கிற நாயகியை தேர்ந்தெடுக்கலாம். அது படத்துக்கு இன்னும் அதிக விளம்பரத்தை தந்திருக்கும், எனினும் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருந்தார். இத்திரைப்படத்தில் கமிட் ஆனதில் இருந்தே நான் ரெகுலராக வொர்க் ஷாப்புக்கு சென்றேன். பட அலுவலகம் சென்று, படத்தைப் பற்றிய பேச்சுகளில் ஈடுபட்டேன். முதலில் ஷீட் செய்ய்யும்போது நான் பயந்துவிட்டேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. க்ளைமாக்ஸ் எல்லாம் என்னால் பண்ண முடியாது என நான் அழுதுவிட்டேன் இயக்குநர் சதீஷ்தான் ஆறுதல் தந்து நடிக்க வைத்தார்.
சில வசனங்களை நான் பேச திணறியபோது ஜிவி பிரகாஷ் எனக்கு சொல்லிக் கொடுத்து ஊக்கப்படுத்தி பேச வைப்பார். என்னுடைய அம்மா தனி ஆளாக எப்போதுமே என்னுடன் இருந்தார். எனக்கு மிகவும் நம்பிக்கையாக இருந்தார். எனக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்து அழைத்து வந்திருக்கிறார். இவ்வாறு பேசினார். தாயை பற்றி பேசும்போது தொடர்ந்து பேச முடியாமல் கண்ணீர் சிந்தினார். அழுதபடியே பேச்சையும் முடித்துக் கொண்டார். இது விழாவுக்கு வந்திருந்தவர்களை நெகிழ வைத்தது.