Advertisement

சிறப்புச்செய்திகள்

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி

02 ஏப், 2025 - 01:39 IST
எழுத்தின் அளவு:
I-wont-date-a-married-man-Divya-Bharathi-breaks-silence-on-GV-Prakashs-family-dispute

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜிவி பிரகாஷ் இருக்கிறார். சிறுவயது முதலே தான் காதலித்து வந்த பாடகி சைந்தவியை 2013ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் கடந்தாண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சமீபத்தில் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே இவர்கள் பிரிவுக்கு நடிகை திவ்யபாரதி காரணம் என பேச்சு எழுந்தது. இருவரும் பேச்சுலர், கிங்ஸ்டன் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். இதுதொடர்பாக கிங்ஸ்டன் பட புரொமோஷனில் கூட திவ்ய பாரதியிடம் கேள்வி எழுந்தபோது, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றார். இருப்பினும் தொடர்ச்சியாக இருவரையும் தொடர்புப்படுத்தி கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதுபற்றி திவ்யபாரதி இன்ஸ்டாவில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், ‛‛தனிப்பட்ட ஒருவரின் குடும்ப பிரச்னையில் என் பெயரை இழுப்பது நியாயமில்லை. ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒருபோதும் நடிகரையோ, திருமணமானவரையோ நான் டேட்டிங் செய்ய மாட்டேன். இதுபோன்ற வதந்திகளுக்கு நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அவை எல்லை மீறி செல்வதால் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நான் வலிமையான பெண், இதுபோன்ற வதந்திகள் என்னை சோர்வடைய செய்யாது. வதந்திகளை தவிர்த்து நல்ல உலகத்தை உருவாக்க முயற்சிப்போம். இந்த விவகாரத்தில் இதுவே எனது முதலும், கடைசியுமான விளக்கம்''

இவ்வாறு திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கைஇந்திய பொழுதுபோக்கு துறையின் ... வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

02 ஏப், 2025 - 02:04 Report Abuse
Prasanna Krishnan R Then shall we?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in