என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜிவி பிரகாஷ் இருக்கிறார். சிறுவயது முதலே தான் காதலித்து வந்த பாடகி சைந்தவியை 2013ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் கடந்தாண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சமீபத்தில் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே இவர்கள் பிரிவுக்கு நடிகை திவ்யபாரதி காரணம் என பேச்சு எழுந்தது. இருவரும் பேச்சுலர், கிங்ஸ்டன் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். இதுதொடர்பாக கிங்ஸ்டன் பட புரொமோஷனில் கூட திவ்ய பாரதியிடம் கேள்வி எழுந்தபோது, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றார். இருப்பினும் தொடர்ச்சியாக இருவரையும் தொடர்புப்படுத்தி கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதுபற்றி திவ்யபாரதி இன்ஸ்டாவில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், ‛‛தனிப்பட்ட ஒருவரின் குடும்ப பிரச்னையில் என் பெயரை இழுப்பது நியாயமில்லை. ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒருபோதும் நடிகரையோ, திருமணமானவரையோ நான் டேட்டிங் செய்ய மாட்டேன். இதுபோன்ற வதந்திகளுக்கு நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அவை எல்லை மீறி செல்வதால் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நான் வலிமையான பெண், இதுபோன்ற வதந்திகள் என்னை சோர்வடைய செய்யாது. வதந்திகளை தவிர்த்து நல்ல உலகத்தை உருவாக்க முயற்சிப்போம். இந்த விவகாரத்தில் இதுவே எனது முதலும், கடைசியுமான விளக்கம்''
இவ்வாறு திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.