இந்த உலகில் யாரும் சுயமாக உருவாக்கப்படுவது இல்லை : சல்மான் கான் பேட்டி | அழகின் ரகசியம் சொன்ன ராஷ்மிகா | மார்ச் 27, 28ல் வெளியான படங்களின் நிலைமை என்ன | மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். பின்னணிப் பாடகி சைந்தவியை படிக்கும் காலத்திலிருந்து காதலித்து 2013ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். 10 ஆண்டுகளாக இவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்ற நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையினால் கடந்தாண்டு மே மாதம் பிரிவதாக அறிவித்தனர். அதேசமயம் இருவரும் நட்பை தொடருகின்றனர். ஜிவி பிரகாஷின் இசையில் சைந்தவியும் பங்கேற்று பாடினார்.
இந்நிலையில் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை, குடும்பநல நீதிமன்றத்தில் இன்று(மார்ச் 24) இருவரும் நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்தனர். ஒரே காரில் வந்த ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர் சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். அதில் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.