பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து கேட்டு சென்னை, குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அக்., 30ல் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். பாடகி சைந்தவியை காதலித்து 2013ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்தாண்டு இவர்கள் பிரிவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தனர். மேலும் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று(செப்., 25) நடந்தது. ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினர். மன ஒத்து பிரிவதில் இருவரும் உறுதியாக உள்ளனர். அதேசமயம் மகளை சைந்தவி பார்த்துக் கொள்வதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என ஜிவி பிரகாஷ் நீதிபதியிடம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீதான தீர்ப்பு அக்., 30ல் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் அன்றைய தினம் இருவருக்கும் விவாகரத்து கிடைத்துவிடும் என தெரிகிறது.