என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மணிகண்டன் நடிப்பில் வெளியான 'குடும்பஸ்தன்' படம் 50 நாட்களை கடந்து இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படத்தின் வெற்றியால் மணிகண்டன் பெரும்மகிழ்ச்சியில் உள்ளார். அவர் கடைசியாக நடித்த 'குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்' ஆகிய 3 படங்களுமே 50 நாட்களை கடந்து ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது 'எக்ஸ்' தளத்தில் மணிகண்டன் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சிறிய வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை. மக்களிடமிருந்து பெற்ற அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறேன். ஒரு சிறிய படத்தினை 50 நாட்கள் தியேட்டர்களில் கொண்டாடப்படுவது மிகப்பெரிய வெற்றி மற்றும் குறிப்பிடத்தக்க சாதனை. இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, மூன்று முறை! நாங்கள் பெற்ற அன்பு எப்போதும் எங்களுடனே இருக்கும்.
என் மீதும் எங்கள் தொலைநோக்குப் பார்வையின் மீதும் நம்பிக்கை வைத்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பிய இயக்குனர்களுக்கு, இப்படத்தினை வெற்றிபெற உதவிய அனைத்து அற்புதமான நடிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவிட்டதுடன், குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் படக்குழுவினரை குறிப்பிட்டும் நன்றி தெரிவித்துள்ளார்.