மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

மணிகண்டன் நடிப்பில் வெளியான 'குடும்பஸ்தன்' படம் 50 நாட்களை கடந்து இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படத்தின் வெற்றியால் மணிகண்டன் பெரும்மகிழ்ச்சியில் உள்ளார். அவர் கடைசியாக நடித்த 'குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்' ஆகிய 3 படங்களுமே 50 நாட்களை கடந்து ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது 'எக்ஸ்' தளத்தில் மணிகண்டன் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சிறிய வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை. மக்களிடமிருந்து பெற்ற அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறேன். ஒரு சிறிய படத்தினை 50 நாட்கள் தியேட்டர்களில் கொண்டாடப்படுவது மிகப்பெரிய வெற்றி மற்றும் குறிப்பிடத்தக்க சாதனை. இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, மூன்று முறை! நாங்கள் பெற்ற அன்பு எப்போதும் எங்களுடனே இருக்கும்.
என் மீதும் எங்கள் தொலைநோக்குப் பார்வையின் மீதும் நம்பிக்கை வைத்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பிய இயக்குனர்களுக்கு, இப்படத்தினை வெற்றிபெற உதவிய அனைத்து அற்புதமான நடிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவிட்டதுடன், குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் படக்குழுவினரை குறிப்பிட்டும் நன்றி தெரிவித்துள்ளார்.