பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

சந்தானம் நடித்திருக்கும் சபாபதி படம் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று(நவ., 16) மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் சந்தானத்திடம் ஜெய் பீம் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஜெய் பீம் படமென்று இல்லை. எந்த படமாக இருந்தாலும், நாம் ஏதோ ஒரு கருத்தை பேசுகிறோம் என்றால், உதாரணமாக நாம் இந்துக்களை பற்றி பேசுகிறோம் என்றால், எவ்வளவு உயர்த்தியும் பேசலாம். அதில் தப்பில்லை. ஆனால், கிறிஸ்துவர்கள் தவறு, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று பேசக் கூடாது.
யாரையும் உயர்த்தி பேசலாம். ஆனால், அடுத்தவர்களைத் தாழ்த்தி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம். அடுத்தவங்களை புண்படுத்துற மாதிரி பேசக் கூடாது. இதுதான் என் கருத்து. ஏனென்றால், சினிமா என்பது இரண்டு மணி நேரம் எல்லா மதத்தினரும், சாதியினரும் ஒன்றாக அமர்ந்து பார்ப்பது. உங்கள் படத்தில் நீங்கள் யாரையும் உயர்த்தி பேசிக் கொள்ளுங்கள். ஆனால், அடுத்தவர்களை தாழ்த்தி பேசாதீர்கள். அது தேவையில்லாத விஷயம்.
இனிவரும் இளைஞர்கள் சமூதாயத்திற்கு நல்ல சினிமாவை தர வேண்டும். இரண்டு மணிநேரம் செலவழித்து கவலைகளை மறந்து சாதி, மதம் கடந்து திரையரங்கு வருபவர்களுக்கு, அதற்கான விருந்தாக தான் திரைப்படம் இருக்க வேண்டும். நான் அதை செய்து கொண்டிருக்கிறேன். என் பக்கம் எதுவும் தவறு இருந்தால் சொல்லுங்கள். திருத்திகொள்ள வேண்டியதை திருத்திக் கொள்கிறேன்” என்றார்.