எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து கடந்த 16ம் தேதி திரைக்கு வந்த படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பு இப்படத்தில் இடம்பெற்ற சீனிவாசா கோவிந்தா என்ற பாடல் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அதையடுத்து படக்குழு, அந்த பாடல் வரிகளும், இசையும் படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக அறிவித்தார்கள். அதையடுத்து திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த டிடி நெக்லஸ் லெவல் படம், நான்கு நாட்களில் 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
அதேபோல் இதே மே 16ம் தேதி சூரி நாயகனாக நடித்து திரைக்கு வந்த படம் மாமன். அவருடன் ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் திரைக்கு வந்து நான்கு நாட்களில் 12 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.
அந்தவகையில் வசூலில் சந்தானத்தை பின்னுக்கு தள்ளி உள்ளார் சூரி.