அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் |
கோவையை சேர்ந்தவர் அதுல்யா ரவி. அவரது நண்பர்கள் இணைந்து உருவாக்கிய காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன்பிறகு யாமிலி, சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 படங்களில் நடித்தார். தற்போது முருங்கைக்காய் சிப்ஸ், எண்ணித்துணிக படங்களில் நடித்து வருகிறார்.
ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கோவை பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தனது பெருமையை அழித்து விட்டதாக அதுல்யா கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛பாலியல் துன்புறுத்தலால் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவமானமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட பள்ளியின் அருகில் தான் எங்கள் வீடு. அந்த பகுதியில் வளர்ந்தற்காக நான் எப்போதும் பெருமைப்படுவேன். இந்த சம்பவம் அந்த பெருமையை அழித்துவிட்டது. என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த பெண்ணுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையும் தரப்பட வேண்டும்'' என்றார்.