கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 50வது பிறந்த நாளையொட்டி சென்னையில் பெரிய இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இது குறித்து பேசிய எழுத்தாளர் பவா செல்லத்துரை, ‛‛நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காது. சுவையான அதை அவர் ஏன் விரும்பவில்லை என்பதற்கு காரணம் இருக்கிறது. சின்ன வயதில் அவரது அம்மாவை இழந்தவர். அம்மா மறைவையொட்டி பள்ளியில் இருந்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறார்கள். முத்துக்குமார் அழக்கூடாது என்பதற்காக அந்த வழியாக சென்ற லாரியில் இருந்து கீழே விழுந்த கரும்பை உடைத்து கொடுத்து இருக்கிறார்கள். அதை சுவைத்துக் கொண்டே அம்மா உடலை பார்த்து இருக்கிறார் நா.முத்துக்குமார். அதன்பின் கரும்பை பார்க்கும் போதெல்லாம், அவருக்கு அம்மா நினைவு வந்து இருக்கிறது. அதனால் அவர் கரும்பு சாப்பிடுவதில்லை என்று புது தகவல் சொன்னார் பவா சொல்லத்துரை. பெரும்பாலும் அவர் பாடல்களை எழுத சென்னையில் இருந்து காரில் ஆம்பூர் செல்வார். அங்கே பிரியாணி சாப்பிட்டு விட்டு திரும்புவார். அதற்குள் பாடல் எழுதிவிடுவார் என அவர் நண்பர்கள் பகிர்ந்தனர்.




