நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் | 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் |

பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கடந்த 2022ல் 'தி காஷ்மீர் பைல்ஸ்' என்கிற படத்தை வெளியிட்டு நாடு எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். 90களின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களையும் அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்த உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
இதற்கு முன்னதாக கடந்த 2019ல் 'தி தாஷ்கண்ட் பைல்ஸ்' என்கிற படத்தையும் அவர் இயக்கி இருந்தார். காஷ்மீர் பைல்ஸ் படத்தை தொடர்ந்து 'தி வேக்ஸின் வார்' என்கிற படத்தை அவர் இயக்கினாலும் அது பெரிய அளவில் கவனம் பெறாமல் போனது.
இதையடுத்து அவர் 'தி டெல்லி பைல்ஸ்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலை 'தி பெங்கால் பைல்ஸ்' என மாற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விவேக் அக்னிஹோத்ரி. இந்த படம் வரும் செப்.,5ல் வெளியாக இருக்கிறது. 1940களில் பிளவுபடாத வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகி இருப்பதாலும் வங்காளத்தைப் பற்றியே படம் பேசுவதாலும் இதன் டைட்டிலை தி பெங்கால் பைல்ஸ் என மாற்றியுள்ளதாக கூறியுள்ளார் விவேக் அக்னிஹோத்ரி.