வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

விடுதலை 2 படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க இருந்த படம் ‛வாடிவாசல்'. சில ஆண்டுகளாகவே இந்த படம் துவங்குவதில் தாமதம் நிலவி வந்தது. தற்போது இப்படம் கைவிடப்பட்டுள்ளது. இதனால் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க போகிறார் வெற்றிமாறன். இதை தாணுவே தயாரிக்கிறார்.
இந்த கதை வாடிவாசல் அல்ல, வட சென்னையில் நடைபெறும் கதைக்களத்தை மையப்படுத்தி உருவாகிறது. ஆனால் வட சென்னை 2 இல்லை. தற்போது இந்த படம் சத்தமின்றி துவங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடிகர் கவின் மற்றும் இயக்குனர் நெல்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வட சென்னை படத்தில் நடித்த கிஷோர், சமுத்திரக்கனி மற்றும் ஆண்ட்ரியா ஆகியோரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று வைரலாகிறது. இதில் வெற்றிமாறன் சில விஷயங்களை கூற அதை சிம்பு, நெல்சன் ஆகியோர் கேட்பது போன்று அந்த போட்டோ உள்ளது.




