ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை |
1990களில் பிசியான இசை அமைப்பாளராக இருந்தவர் தேவா. 400 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். இளையராஜா கிராமிய பாடல்களை சினிமாவிற்கு கொண்டு வந்தது போன்று சென்னையின் பாரம்பரிய இசையான கானா பாடல்களை சினிமாவுக்கு கொண்டு வந்தவர். தற்போது அவர் சில படங்களுக்கு இசை அமைத்தாலும் சினிமாவை விட்டு சற்று விலகியே இருக்கிறார். சமீபத்தில் அவரை பெருமைப்படுத்தும் விதமாக பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம், தேவாவை அழைத்து பாராட்டி உள்ளது. அதில் முக்கியமாக ஆஸ்திரேலியா பார்லிமென்ட்டில் தேவாவுக்கு மிகப்பெரிய கவுரம் அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டின் அவைத்தலைவர் இருக்கையில் அமரவைக்கப்பட்டு அவருக்கு செங்ககோலும் வழங்கப்பட்டது. இது அந்த நாட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய கவுரவமாகும்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்கு அளித்த மரியாதை பெருமை அளிக்கிறது. எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கவுரவத்தை வழங்கியதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாசாரத்தை பரப்பி வரும் ஒவ்வொரு கலைஞருக்கும் இது சொந்தம். எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும் தான் என் பலம். இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்'' என்றார்.